மேலும்

பொன்சேகாவுக்கு பிரதமர் பதவி – விலைக்கு வாங்க முயன்ற மகிந்த

sarath-fonsekaமகிந்த ராஜபக்ச அரசாங்கம் தனக்குப் பிரதமர் பதவியைத் தருவதற்குக் கூட முன் வந்ததாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும், இதுகுறித்து சிறிலங்கா அரசுடன் கலந்துரையாடல்கள் நடத்தி வருவதாகவும் வெளியான செய்திகளை மறுத்து, சரத் பொன்சேகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், ”சிறிலங்கா இராணுவத்தில் இருந்து விலகி, 2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாகவே, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எனக்கு பிரதமர் பதவியைத் தர முன்வந்தது.

2010ம் ஆண்டில் எனக்குப் பிரதமர் பதவி உள்ளிட்ட பல அரச பதவிகளைத் தருவதற்கு முன்வந்தனர்.

ஆனால் அவற்றை நான் நிராகரித்து விட்டேன். ஊழல் அரசாங்கத்தில் பங்காளியாக நான் மறுத்து விட்டேன்.

இப்போது கூட அந்த எண்ணம் எனக்கு கிடையாது. மைத்திரிபாலவுக்கான ஆதரவு தொடரும்.

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *