மேலும்

மைத்திரியின் தேர்தல் அறிக்கை – தமிழில் கூட இல்லை

maithri-manifastoஎதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை கூட தமிழில் வெளியிடப்படவில்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதில் தமிழர் பிரச்சிக்கான தீர்வு குறித்த எந்தக் கருத்துக்களும் முன்வைக்கப்படாத அதேவேளை, தேர்தல் அறிக்கை கூடத் தமிழில் வெளியிடப்படவில்லை.

64 பக்கங்களைக் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், தமிழ்மொழியிலான தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இது, தமிழ் வாக்காளர்களை எதிரணியினர் பொருட்படுத்தவில்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *