மேலும்

மைத்திரியுடன் நேரடி விவாதம் நடத்த மகிந்த மறுப்பு

MR-maithri (1)சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேரடி விவாதத்தில் பங்கேற்கமாட்டார் என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை, ஜனநாயகம், நல்லாட்சி தொடர்பாக, எதிர்வரும் ஜனவரி 1ம் நாள் பகிரங்க நேரடி விவாதத்துக்கு வருமாறு, மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்திருந்தார்.

இதுகுறித்து லங்கா புவத்திடம் தகவல் வெளியிட்ட கெஹலிய ரம்புக்வெல,

“இது உண்மையில் ஒரு நகைச்சுவை.சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தரத்தில் மைத்திரிபால சிறிசேன இல்லை.

எனவே, பகிரங்க விவாதத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கமாட்டார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *