பிரதியமைச்சர் பதவியை துறந்தார் திகாம்பரம் – எதிரணியுடன் இணைகிறார்
அண்மையில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட ப.திகாம்பரம் இன்று காலை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர், தமது மாவட்டத்தின் தேவைகள் குறித்து அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும், ஏனைய பிரதி அமைச்சர்களுக்கு நிகரான வாய்ப்புக்ள வழங்கப்படாததாலும், அதிருப்தியடைந்து மகிந்த ராஜபக்ச அரசில் இருந்து வெளியேறியுள்ளார்.
பிரதி அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ள ப.திகாம்பரம், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணனும், பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும், இன்று பிற்பகல் தமது முடிவை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.