மேலும்

மகிந்தவுக்கு ஆதரவை உறுதிப்படுத்தினார் ஆறுமுகன் – திரிசங்கு நிலையில் திகாம்பரம்

mahinda-arumuganவரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த, இதொகா தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமானுடன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த இதொகா குழுவினர், மலையகத் தமிழர்கள், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பிரதியமைச்சர் திகாம்பரம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாகவும், அவர் எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *