புலிகளின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் நெடியவன் கைது
திருகோணமலை, சாம்பல்தீவில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
நெடியவன் எனப்படும், சிறிஸ்கந்தராஜா (வயது-38) என்பவரே நேற்றிரவு சாம்பல் தீவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு போரில் முடிவில் இவர், கட்டாருக்குத் தப்பிச் சென்றதாக தீவிரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில், போலியான பெயரில் நாடு திரும்பிய நிலையிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சாம்பல்தீவு, சம்பூர், நிலாவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் இவர் தொடர்புடையவர் என்றும், சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.