சீனாவின் தலையீடுகள் அதிவேகமாக அதிகரிப்பு – இந்திய கடற்படைத் தளபதி கவலை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் அதிவேகமாக அதிகரித்து வருவதாக இந்தியப் கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் டோவன் கவலை வெளியிட்டுள்ளார்.
என்டிரிவி தொலைக்காட்சிக்கு இன்று அவர் அளித்துள்ள செவ்வியில்,
“இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது அணுசக்தி நீர்மூழ்கிகளை நிலை நிறுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கு கவலை அளிக்கின்ற விடயம்.
இது அனைத்துலக கடற்பகுதி என்பதால், இந்தியாவினால் அதிகமாக எதையும் செய்து விட முடியாது.
இந்தநிலையில், இந்தியக் கடற்படை தனது கப்பல்களைக் கொண்டு மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.
நாம் எமது நலன்களைக் பாதுகாத்தேயாக வேண்டும்.
நீர்மூழ்கிகள் மற்றும் உலங்குவானூர்திகளின் பற்றாக்குறை கவலை தரும் விடயமே.
ஆனால், எம்மிடம் என்ன இருக்கிறதோ அவற்றைக் கொண்டு போராட வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் சீனாவின் நீர்மூழ்கிகள் தரித்து நின்றத் தொடங்கியுள்ளமை, மற்றும் மாலைதீவுடனான உறவுகளை சீனா பலப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்தியக் கடற்படைத் தளபதியின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.