மைத்திரிபாலவின் கருத்தினால் சம்பிக்க அதிருப்தி
தாம் ஆட்சிக்கு வந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து, ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க,
“தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக, மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துடன் உடன்பட முடியாது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் முற்றாக எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.”
உள்நாட்டில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.