மேலும்

எதிரணிக்குத் தாவினார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் – சிறிகோத்தாவில் மைத்திரிபால

hunais-farookஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். (இரண்டாம் இணைப்பு)

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கட்சி தாவியுள்ள இவருக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் பதவி அளிக்கப்படலாம் என்றுதகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிகோத்தாவில் மைத்திரிபால

இதற்கிடையே, எதிரணியின் பொதுவேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மைத்திரிபால சிறிசேன, இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்கு சென்று, கட்சியின் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

maithri-srikoththa (1)

maithri-srikoththa (2)

சிறிகோத்தாவில் திரண்டிருந்த பெருந்தொகையான ஐதேக ஆதரவாளர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.

சிறிகோத்தாவில், அமைக்கப்பட்டுள்ள பொதுவேட்பாளரின் தேர்தல் பரப்புரைக்கான மத்திய நிலையத்தையும், மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *