மேலும்

95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் பொய்யாகின

parliamentசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 152 வாக்குகள் அளிக்கப்பட்டன. 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்து வாக்களித்தனர்.

ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  ஜேவிபி ஆகிய கட்சிகள் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.

மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆறு பேரும் ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் பெருமெடுப்பினால் கட்சித் தாவல்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அத்தகைய எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *