மேலும்

60 பேர் எதிரணிக்குக்குத் தாவுவர் – சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா

SLFPஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சுமார் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் தேர்தலில் எதிரணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 60 வரையான அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் தேர்தலுக்கு முன்னர் எதிரணியுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 20 பேர் விரைவில் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கட்சியின் தலைவர் என்ற வகையில் இந்த நியமனத்தை செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை நேற்று சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *