போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன
நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பு நகர மண்டபத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
‘இன்றைய நாள் எனது அரசியல் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.
இந்த முடிவு சிறிலங்கா அதிபருக்கு எதிரானது அல்ல,ஆனால் அவரது ஆட்சிக்கு எதிரானது.
நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது‘என்று தெரிவித்தார்.
ராஜித சேனாரத்ன கடற்றொழில் அமைச்சர் பதவியை விட்டு விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.