மேலும்

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

mahinda-rajapaksha-1ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 7.30 மணியளவில் அதிபர் செயலகத்தில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளும்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அவசர கூட்டத்தில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அழைப்பு எல்லா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவார் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான இறுதி முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *