அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவுக்கு தாவினார்
சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இன்றுமாலை இணைந்து கொண்டுள்ளார்.
ஐதேக தலைமையகத்துக்கு இன்று மாலை சென்ற அவருக்கு, சிறிகோத்தாவில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதையடுத்து அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் வசந்த சேனநாயக்க கலந்து கொண்டார்.
வசந்த சேனநாயக்க, சிறிலங்காவின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் பேரனாவார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்தே இவர் கட்சி தாவியுள்ளார்.
மேலும் பலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐதேகவுக்குத் தாவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.