மேலும்

பொய் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ச – எரிக் சொல்ஹெய்ம்

erik-solheimசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொய் கூறியுள்ளதாக சிறிலங்கா சமாதான முயற்சிகளில் நோர்வேயின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய  எரிக் சொல்ஹெய்ம் குற்றம்சாட்டியுள்ளார்.

குருநாகலில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் நிதி உதவி செய்தது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தமது அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து சற்றுமுன்னர் டுவிட்டரில் பதிலளித்துள்ள, எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ராஜபக்ச, தேர்தல் அணுகுமுறைக்காக பொய் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒளிவுமறைவின்றி உண்மையை நாளை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *