இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்காவுக்கு வருகிறார்
கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அடுத்த மாத துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வரும் டிசெம்பர் 1ம், 2ம் நாள்களில், சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில், காலியில் நடைபெறவுள்ள, காலி கலந்துரையாடல் என்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவே அவர் கலந்து கொண்டு உரையாற்றுவார்.
நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியத் தூதுவர் வைகே. சின்ஹா, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் கொழும்பு வருகை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்