சீனக் கடற்படையின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்திய கடற்படைத்தளபதி
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இதுவரையில் சீனக் கடற்படையின் செயற்பாடுகள் கவலை தருகிறது.
இது அவர்களின் கடற்கொள்ளைத் தடுப்பு படையின் ஒரு பகுதியாக,2008ம் ஆண்டு தொடக்கம் இந்தியப் பெருங்கடலில் இருந்து வருகிறது.
வழக்கமாக கப்பல்களையும் எப்போதாவது, நீர்மூழ்கிகளின் நடமாட்டங்களையும் அவதானிக்க முடிகிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறிலங்கா துறைமுகம் அவர்கள் இருந்திருக்கும்.
இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளை நாம் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்.
அவர்கள் சிறிலங்கா கடற்பரப்பில் தான் இருக்கிறார்கள். சிறிலங்கா துறைமுகத்துக்குத் தான் பயணம் செய்கிறார்கள்.
இது சிறிலங்கா, சீன கடற்படைகளுக்கு இடையிலான விவகாரம்.
தமது நீர்மூழ்கிகளுக்கான விநியோகத் தேவைகளுக்காக இந்தியாவை சீனா அணுகவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.