மேலும்

சம்பந்தன், ஹக்கீம் இந்தியத்தூதுவருடன் 3 மணிநேரம் மந்திராலோசனை

sampantha-hakeemதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த இரகசியச் சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு கட்சிகளின் தலைவர்களும், இந்தியத் தூதுவருடன் சுமார் 3 மணிநேரம் வரை விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

அடுத்த வாரம் சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இன்னமும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *