மேலும்

மகிந்த – மோடி தொலைபேசியில் பேச்சு

Modi-mahindaசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது இரு தலைவர்களும், இருதரப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் விவகாரம் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்கள் சுமுகமான வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சார்க் மாநாடு குறித்தும், மோடியும், மகிந்தவும் இந்த தொலைபேசி உரையாடலில் விவாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விவகாரத்தினால், இந்திய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டின் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தநிலையிலேயே மகிந்த ராஜபக்சவுடன் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *