மேலும்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையே நாளை சந்திப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளை கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று  நடத்தப்படவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முக்கியமாக இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.

எனினும், இந்தப் பேச்சுக்களில், தேர்தலை எதிர்கொள்வது குறித்துப் பேசப்படாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப் தீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *