மேலும்

இந்திய, மாலைதீவு கடலோரக் காவல்படைகளுடன் சிறிலங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி

இந்திய மற்றும் மாலைதீவு கடலோரக் காவல்படைக் கப்பல்களுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை நான்கு நாள் கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

“DOSTI – XII” என்ற பெயரிடப்பட்ட இந்த பயிற்சி, மாலைதீவுக் கடலில் கடந்த மாதம் 28ம் நாள் தொடக்கம் 31ம் நாள் வரை இடம்பெற்றுள்ளது.

நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும், பரஸ்பர செயலாற்றலை பரிமாறிக் கொள்ளும், ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சமுத்ர பங்கேற்றுள்ளது.

இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில், சமர் மற்றும் ராஜ்தூத் ஆகிய கப்பல்களும், ஒரு உலங்குவானூர்தியும், மாலைதீவு சார்பில்,  ஹுராவி, சகீட் அலி ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *