வத்திக்கான் குழு கொழும்பு வந்தது – பாப்பரசரின் பயணம் குறித்து முடிவு செய்யும்
சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலால், பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்காப் பயணம் குறித்த சந்தேகங்கள் நீடிக்கும் நிலையில், பாப்பரசரின் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் இருந்து மூன்று பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்தித்து பாப்பரசரின் பயணத் திட்டம் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
கொழும்பு வந்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து, பாப்பரசரின் பயணத்துக்கு ஏற்ற சூழல் உள்ளதா என்று வத்திக்கானுக்கு அறிவிக்கவுள்ளது.
மற்றொரு வத்திக்கான் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் சிறிலங்கா வரவுள்ளது.
பாப்பரசர் வரும் ஜனவரி 13ம் நாள் தொடக்கம், 15ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.