வெள்ளத்தில் மூழ்கியது சென்னை – இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.










