மேலும்

Archives

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் விட்டுக் கொடுக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா இராணுவத்தை தரமுயர்த்த உதவுவதாக இந்தியத் தளபதி உறுதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர்சிங் சுஹக், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும், உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு நுழைவிசைவு வழங்க சிறிலங்கா மறுப்பு

நோர்வேயில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு சிறிலங்கா வருவதற்கு, நுழைவிசைவு வழங்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

பாரிஸ் பூகோள காலநிலை மாநாட்டில் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா பிரதமர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசை சென்றடைந்துள்ளார்.

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம்

சிறிலங்காவுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், சிறிலங்கா இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த கொழும்பு வருகிறார் டேவிட் கமரூன்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

வெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.

வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, வவுனியாவில் இன்று ‘மாவீரர் நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி

தாயக விடுதலைக்காக களமாடி மடிந்த வீரர்களை நினைவுகூரும், மாவீரர் நாள் இன்று தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்தான் மாணவன்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.