மேலும்

Archives

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

இந்திய கொள்கை ஆய்வாளர்கள் குழு சிறிலங்காவில் – பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் தமிழரின் காணிகளை அபகரிக்கும் ஜே.ஆரின் மகன்

சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள தர்மபுரம் கிராமத்தில் பெருமளவு காணிகள் சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து மன்னார் திரும்பினார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை நேற்று பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்துக்குத் திரும்பினார்.

சரத் பொன்சேகா வெளியிட்ட படங்கள் – அதிர்ச்சியில் விஜேதாச ராஜபக்ச

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.

சென்னை வெள்ளம் காவு கொண்ட இணையத் தமிழ் முன்னோடி ‘ஸ்ரீநிவாஸ்’

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது. ஸ்ரீநிவாஸ் – தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சிறிலங்கா அரசுடனான தொடர்புகளை அவசரப்பட்டு துண்டித்து விடமுடியாது – இரா.சம்பந்தன்

நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தவேளையில் அவசரப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமனம்

சிறிலங்காவின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும், ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)

பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.