மேலும்

சிறிலங்கா பிரதமருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு

General Dalbir Singh -ranil (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா பிரதமருடன், சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், இந்திய இராணுவத் தளபதியுடன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹாவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

General Dalbir Singh -ranil (1)

General Dalbir Singh -ranil (2)

இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை சுட்டிக்காட்டிய சிறிலங்கா பிரதமர், இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்களின் முடிவில், சிறிலங்கா பிரதமரும், இந்திய இராணுவத் தளபதியும், நினைவுச்சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *