மேலும்

Archives

வரலாற்றில் இடம்பிடித்தது கிளிநொச்சியின் மழைவீழ்ச்சி

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை பதிவாகிய, மழை வீழ்ச்சி, சிறிலங்காவில் பெய்த அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருக்கெடுத்துப் பாயும் களனி கங்கை – வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரப்பகுதிகள் (படங்கள்)

சிறிலங்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், களனி கங்கையில் நீர்மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்து, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது.

கேகாலை நிலச்சரிவுகளில் 150 பேருக்கு மேல் பலி (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலையும், நேற்றுக் காலையும் ஏற்பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 150 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.

கேகாலை நிலச்சரிவில் 16 சடலங்கள் மீட்பு – 200 குடும்பங்கள் மாயம்? (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், புதைந்து போன மூன்று கிராமங்களில் இருந்து, 13 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில், முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும், நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது.

சிறிலங்காவில் இயற்கையின் கோரத் தாண்டவம் – 73 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதி (ஒளிப்படங்கள்)

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவினால், இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காணாமற்போயுள்ளதுடன், 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 370,067 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ஆர்மிரேஜ் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

விமானத்தில் குண்டு பற்றி வாக்குவாதம்- நோர்வே விமான நிலையத்தில் இலங்கையர் தடுத்து வைப்பு

ரயன் எயர் விமானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர், நோர்வேயின் மொஸ் விமான நிலையத்தில், நோர்வே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

உகண்டா பயணச் செலவை சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த

கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர் கிரசன்ட்டில் அந்த வதிவிடம், சிறிலங்காவின் விமானப்படை மற்றும் இராணுவத் தளபதிகளின் வதிவிடங்களுக்கு நடுவே உள்ளது.