மேலும்

Archives

வவுனியா மாணவி கொலைக்கு நீதி கோரி இன்று வடக்கில் பணிநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு நீதிகோரியும்,  இன்று வட மாகாணத்தில், இரண்டு மணிநேர பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள இனக்கலப்பு திருமண விவகாரம் – ஆளுனருக்கு முதல்வர் பதிலடி

கலப்புத் திருமணத்தின் மூலம், உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று,  வட மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலில் தமிழ் மக்களின் உரிமைகளைக் கொடுங்கள் பின்னர், கலப்புத் திருமணம் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய சாரணர் ஒன்றுகூடலை ஆரம்பித்து வைத்தார் சிறிலங்கா அதிபர்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஒன்றுகூடலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

புலிகளுக்குப் பிந்திய சிறிலங்கா

போரால் பிளவுபட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது. ஆனால் பழைய வடுக்களை ஆற்றக்கூடிய மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல்கள் இடம்பெறும் பட்சத்தில் மாத்திரமே இது வெற்றியளிக்கும்.

ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞர் ‘மாமனிதர்’ அரசையா அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்

ஈழத்தின் முதுபெரும் பன்முக கலைஞரும், கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, வாழும் காலத்திலேயே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவருமான, எஸ்.ரி.அரசு மற்றும் அரசையா என அழைக்கப்படும், சிவக்கொழுந்து திருநாவுக்கரசு  அவர்களின் உடல் இன்று தீயுடன் சங்கமமானது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 7000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நடைபெறும் நிலையில், இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும், 7000இற்கும் அதிகமான பக்தர்கள், நேற்றிரவு கச்சதீவை வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீரவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் – ஒஸ்ரியாவிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

சிறிலங்காவில் நீண்டகாலப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் சீராக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், உதவ வேண்டும் என்று ஒஸ்ரிய அதிபரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத் தளபதியுடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.