மேலும்

Tag Archives: விடுதலைப் புலிகள்

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

திருமலையில் இருப்பது பிரித்தானியர் கால பதுங்குகுழியாம் – கதைவிடுகிறார் அட்மிரல் கரன்னகொட

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இரகசிய வதை முகாம் இருந்ததாக, ஐ.நா நிபுணர் குழு தெரிவித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட பதுங்குகுழி என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழினி பற்றிய சிங்கள ஊடகவியலாளர்களின் பார்வை

‘தமிழினி போன்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்குண்டு. இவர்கள் தமது நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே போராடினார்கள். ஆகவே அந்த நிலம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.’இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், வாசனா சுரங்கிக விதானகே மற்றும் மாதவா கலன்சூரிய ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

திகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

போரின் கடைசி 12 மணித்தியாலங்களில் புலிகளாலேயே அதிக பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்

போரின் கடைசி 12மணி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களுக்கு, விடுதலைப் புலிகளே காரணம் என்று, மக்ஸ்வெல் பரணகம  ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்- வயது 43) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மகரகம மருத்துவமனையில் மரணமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பையும் கடுமையாக சாடும் ஐ.நா அறிக்கை – எவரையும் போர்க்குற்றவாளிகளாக பெயரிடவில்லை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?

  பலம்பொருந்திய சக்திகள் தங்களின் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்காக இலங்கையை கையாளும் சூழலில்தான், தமிழர் தரப்பு தங்களின் (தமிழரின்) நலனை முன்னிறுத்தி இன்றைய சூழலை கையாள வேண்டியிருக்கிறது- புதினப்பலகைக்காக – ‘யதீந்திரா’

போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகா

போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர்  ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.