வவுணதீவு கொலைகள் – 5 மாதங்களுக்குப் பின் முன்னாள் போராளி விடுதலை
மட்டக்களப்பு- வவுணதீவில், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.