மேலும்

Tag Archives: மில்லியன்

சிறிலங்காவின் மிகஉயர்ந்த கட்டடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவில் 96 மாடிகளைக் கொண்ட, மிகஉயரமான கட்டடத்தை கொழும்பின் ராஜகிரிய பகுதியில், இந்திய நிறுவனம் ஒன்று, அமைக்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்

சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 149 மில்லியன் ரூபா கொடுத்த சீன நிறுவனம் – விசாரணையில் அம்பலம்

சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மூன்று ஆண்டுகளில் 785 மில்லியன் ரூபாவை விமானப் பயணங்களுக்காகச் செலவிட்ட மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்காக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை 785 மில்லியன் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடும் வீழ்ச்சி – ஐரோப்பிய ஒன்றியத் தடையின் விளைவு

சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில், 41.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்பாட்டில் கையெழுத்திடுகிறது சிறிலங்கா

சீனாவினால் முன்முயற்சி மற்றும் கூடுதல் மூலதனத்துடன் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில், இணைந்து கொள்ளும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு

அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

9 மாதங்களில் மத்தல விமான நிலையம் ஊடாக 30 ஆயிரம் பேரே பயணம்

சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையத்தின் ஊடாக, கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்ரெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது.