மேலும்

Tag Archives: பாதுகாப்புச் செயலர்

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனக் கடற்படை கப்பல்கள் அனுமதி கோரினால் பரிசீலிப்போம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சீனக் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் வருவதற்கு அனுமதி கோரினால் அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிறைவு

புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் ஆரம்பம்

மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது.

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

கோத்தாவிடம் 2 பில்லியன் ரூபா மானநட்டம் கோருகிறார் ரவி கருணாநாயக்க

தனக்கெதிராக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட ‘பொய்யான குற்றச்சாட்டு’ தொடர்பில் நட்டஈடாக இரண்டு பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பீல்ட் மார்சல் பதவியைக் கோரவில்லை, தந்தால் ஏற்பேன்- என்கிறார் ஜெனரல் பொன்சேகா

தன்னை பீல்ட் மார்சல் தரத்துக்கு பதவி உயர்த்துமாறு தாம் கோரவில்லை என்றும், அரசாங்கம் அந்தப் பட்டத்தை அளிக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா பாதுகாப்புச்செயலருடன் இந்திய துணைத் தூதர் சந்திப்பு

வடக்கு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவை, இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் மகன் குறித்த விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.