மேலும்

Tag Archives: குளியாப்பிட்டிய

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும்

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.

வன்முறைகளைத் தூண்டி விட்ட நாமல் குமார, அமித் வீரசிங்க கைது

குளியாப்பிட்டிய, மினுவாங்கொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என கூறிக் கொள்ளும் நாமல் குமாரவும், மகாசோன் படையணியின் தலைவர் என கூறிக் கொள்ளும் அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் பல இடங்களில் பதற்றம் – 6 காவல்துறை பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு

சிறிலங்காவில் ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கும் சூழல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல காவல்துறைப் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

குளியாப்பிட்டியவில் நள்ளிரவில் பதற்றம் – 3 காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம்

சிறிலங்காவில் குளியாப்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, மேலும் சில காவல்துறை பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவுக்குப் பின்னர் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.