மேலும்

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை

சிறிலங்காவில் சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்கள் இன்று காலை தொடக்கம் சிறிலங்காவில் முடக்கப்பட்டுள்ளன.

சிலாபம், குளியாப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பரவிய வன்முறைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களின் மூலம் பரவும் வதந்திகளை தடுக்கவே இந்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *