மேலும்

Tag Archives: கடவுச்சீட்டு

அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு

gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது  அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவின் கடவுச்சீட்டு முடக்கம் – எந்த நேரத்திலும் கைதாவார்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் கடவுச்சீட்டை முடக்கி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி

கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறை

பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது

போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வந்த இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர், கியூ பிரிவு காவல்துறையினரால் சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்துக்கு 159 பேர் கொண்ட மீட்புக்குழுவை அதிகாலையில் அனுப்பியது சிறிலங்கா

நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கப்பட்டது

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த விமல் வீரவன்சவின் மனைவி கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்ச சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது

சிறிலங்காவின் முன்னான் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முடக்கியுள்ளனர்.

வடக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குப் பயணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நீக்கியிருக்கிறது.