மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது
சிறிலங்காவின் முன்னான் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முடக்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அயடுத்து, அவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகிந்தானந்த அளுத்கமகேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறுவதால், மூன்று மாதங்களுக்கு அவரது கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறு, சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மத்திய வங்கி ஆளுனராக இருந்த அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரின் கடவுச்சீட்டுகள் இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவினால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,