அமெரிக்க குடியுரிமையை இழந்தார் கோத்தா? – கடவுச்சீட்டு ஒப்படைப்பு
gotaஅமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமது அமெரிக்க கடவுச்சீட்டை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்ற அவர், தமது அமெரிக்க கடவுச்சீட்டையும், அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கான உறுதியுரை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டதை அடுத்து, கோத்தாபய ராஜபக்ச, குறைந்தபட்சம் தொழில்நுட்ப ரீதியாக, அமெரிக்க குடியுரிமையை இழந்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.