மேலும்

Tag Archives: ஐ.நா

சிறிலங்கா புலனாய்வு தலைவரைத் திணறடித்த ஐ.நா நிபுணர்கள் – பிணையெடுத்தார் சட்டமாஅதிபர்

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

ஜெனிவாவில் ஐ.நா குழுவின் விசாரணைகளால் திணறிய சிறிலங்கா பிரதிநிதிகள்

சிறிலங்கா இராணுவம், காவல்துறையினால் இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றாக உருவாக்கப்படும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் நேற்று கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது – ஐ.நா குழு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் மரபணுவில் சித்திரவதைகள், கடத்தல்கள் ஊறியுள்ளது – யஸ்மின் சூகா

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு , சிறிலங்காவின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,  அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவராகன யஸ்மின் சூகா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பு வரும் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

ஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் – இன்னமும் முடிவு இல்லை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் சிறிலங்கா பயணம் குறித்த காலஅட்டவணை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?

வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.