மேலும்

தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி இதனை வலியுறுத்தினார்.

”எமது பார்வையில் 30/1 தீர்மானம், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

அனைத்து தரப்புகளினதும் ஒருங்கிணைந்த முயற்சியாக அதனை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிப்போம்.” என்றும் பிரித்தானிய பிரதிநிதி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *