மேலும்

Tag Archives: இராணுவம்

வடக்கிற்குள் குண்டு வாகனங்கள்  – பீதியடைய வேண்டாம் என்கிறது இராணுவம்

வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற  தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவைக் காப்பாற்ற இராணுவம், வெளிவிவகார அமைச்சு இணைந்து நடவடிக்கை

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசராக முன்னர் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ மீதான நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி, மான்செஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சிறிலங்கா இராணுவம் முறைப்படியான முறையீடு ஒன்றைச் செய்யவுள்ளது.

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

2019 இல் 306.1 பில்லியன் ரூபாவை விழுங்குகிறது பாதுகாப்பு செலவினம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்குப் பயந்தால் கோத்தா அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை  அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம் – இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கோட்டை இராணுவத்துக்கே சொந்தம் – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

யாழ்.குடாநாட்டில் மேலும் 522 ஏக்கர் காணிகளை சிறிலங்கா இராணுவம் உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாக, மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.