மேலும்

Tag Archives: இராணுவப் புலனாய்வு

கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

நாரஹேன்பிட்டி சுற்றிவளைப்பில் 23 பேர் கைது – தொடர்கிறது இராணுவ வேட்டை

கொழும்பு- நாரஹேன்பிட்டிய பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து நேற்று நடத்திய தேடுதலில் – பெண் ஒருவர் உள்ளிட்ட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் –  சிறிலங்கா அதிபர்

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

போதைப்பொருளை தடுக்கும் அதிகாரத்தைக் கோரும் சிறிலங்கா இராணுவம்

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

படுவத்தை இரகசிய முகாம் – ஒப்புக்கொண்டார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

கம்பகா- படுவத்தவில் சிறிலங்கா இராணுவத்தின் இரகசிய முகாம் ஒன்று இருந்தது தமக்குத் தெரியும் என்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஒப்புக் கொண்டுள்ளார்.

மேஜர் புலத்வத்த பிணையில் விடுவிப்பு

மூத்த ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான மேஜர் பிரபாத் சீவலி புத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வு அதிகாரி கொலை வழக்கின் சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இராணுவ மயம், தண்டனை விலக்களிப்பு சிறிலங்காவில் தொடர்கிறது – அமெரிக்கா அறிக்கை

சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்வது குறித்தும், தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வது குறித்தும் அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நேற்றுடன் ஓய்வு

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, நேற்றுடன் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலை தளபதிப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.