விசாரணைகளில் இருந்து இராணுவத்துக்கு விலக்கு அளிக்க முடியாது – சிறிலங்கா காவல்துறை
சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய விசாரணைகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினருக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்று கல்கிசை நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக தம்மால் துரத்தப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளே படுகொலை செய்தனர் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஆய்வாளர் நிசாந்த சில்வா, கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
ஆவா குழு விவகாரத்துக்கும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.