மேலும்

புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் –  சிறிலங்கா அதிபர்

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”தீவிரவாதத்துக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன.

போதைப்பொருளுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம்.

130- தொடக்கம் 140 வரையான ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறிலங்காவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவர்களில் 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இந்த தாக்குதல்களுக்கும், இராணுவப் புலனாய்வுத்துறையை பலவீனப்படுத்தியதற்கும் அரசாங்கமே பொறுப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் –  சிறிலங்கா அதிபர்”

  1. ஈசன் says:

    இது ஒரு சாதாரண மிகச் சிறிய தாக்குதலாக இருக்குமென ஒருதரப்பு கண்டும் காணாமல் இருந்தது.
    இப்படியான மனிதப்படுகாெலைகளின் பாேது எந்த ஜனாதிபதியும் நாட்டில் இருப்பதில்லை .இறந்தது அநேகர் தமிழர்கள்.இதே ஒரு விகாரை தாக்கப்பட்டால் இன்று முஸ்லீம்களின் நிலை என்னவாகவிருந்திருக்கும். இது மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டது.இது நல்லாட்சி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமுகமாக வடிவமைக்கப்பட்டதாகினும் தாக்குதலாளிகள் பலபடி மேலே சென்று தங்கள் கை வண்ணத்தை காட்டிவிட்டார்கள்.
    இதை காலம் தாழ்த்தாது அமெரிக்கா பயன்படுத்தி தனது இருப்பை யும் தக்கவை த்துக்காெண்டது.ஆப்பிழுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *