மேலும்

Tag Archives: அமெரிக்கா

சிறிலங்காவிடம் உண்மையான வெளிப்படையான உறவை எதிர்பார்க்கும் அமெரிக்கா

சிறிலங்கா அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டாலும் அது வெளிப்படைத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் வஜ்டா தெரிவித்தார்.

புதன்கிழமையே வெளியாகும் மன்னார் புதைகுழி இரகசியம்

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட றேடியோ கார்பன் பரிசோதனை  அறிக்கை வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு உறவுகள் குறித்து சிறிலங்கா- அமெரிக்கா பேச்சு

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவிடம் மனித உரிமைகளை அமெரிக்கா வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் கொலம்பகே

சிறிலங்காவில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது என்று சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

வங்காள விரிகுடா முனைப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான ஆதரவாக, சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் டி வஜ்டா,தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம் – அமெரிக்கத் தளபதி

சிறிலங்காவில் அரசியல் கொந்தளிப்பு இருந்த போதிலும், சிறிலங்கா படைகளுடன் ஒத்துழைப்பையும், கூட்டையும் தொடர்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் ஐ.நா அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டக் குழு, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

கோத்தாவை அமெரிக்கா தடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் சிறிசேன

அமெரிக்க குடியுரிமையை கோத்தாபய ராஜபக்ச கைவிடும் முயற்சி வெற்றியளிக்காது என்ற நம்பிக்கையிலேயே, அதிபர் மைத்திரிபால சிறிசேன தாம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு விநியோக வசதி – நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு விநியோக   ஆதரவு வழங்கும் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் அமெரிக்கா

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.