மேலும்

Tag Archives: அதுல் கெசாப்

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர்.  திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஜெனிவாவில் ஆதரவு திரட்டும் அமெரிக்கா – அதுல் கெசாப்பும் ஜெனிவா விரைவு

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு, உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா விரைகிறார் நிஷா பிஸ்வால் – ஐ.நா அறிக்கைக்கு முன் அமெரிக்கா அதிரடி நகர்வு

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்கா அதிபரிடம் நியமனப் பத்திரங்களைக் கையளிப்பு

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப்  நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.  வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பதவியேற்கிறார் அதுல் கெசாப் – செனட் ஒப்புதல்

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அதுல் கெசாப் (வயது 44) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவ வேண்டியுள்ளது – அதுல் கெசாப்

சிறிலங்காவில் வாழும் பல்வேறு இன மற்றும் மதக்  குழுக்களிடையே  நிலையான அமைதியையும், கூட்டுறவையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருப்பதாக, சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக அமெரிக்க அதிபரால் முன்மொழியப்பட்டுள்ள அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப் – பரிந்துரைத்தார் ஒபாமா

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப்பின் பெயரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.