சிறிலங்கா இராணுவத்தினருக்கு வாய்ப்பூட்டு – கிரிசாந்த டி சில்வா கடும் உத்தரவு
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகளில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தடைவிதித்துள்ளார். இது தொடர்பாக அவர் படையினருக்கு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.