மேலும்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜெய்சங்கர் – பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்து பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்மை கண்டறியும் குழுவை யாழ்ப்பாணம் அனுப்புகிறது தேசிய காவல்துறை ஆணைக்குழு

அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பாக உண்மை கண்டறியும் அதிகாரிகள் குழுவொன்றை யாழ்ப்பாணம் அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை சிறிலங்காவுக்கு மீளக் கிடைப்பது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளிலேயே தங்கியிருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ள உறுதிமொழி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம்

கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளை மறுநாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கஜனின் உடல் கிளிநொச்சியில் அடக்கம்

கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராஜா கஜனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

சர்ச்சைகளில் சிக்கிய மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஒன்பது பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன அறிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றுமாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

620 விமானப் பயணங்களை ரத்துச் செய்ய வேண்டிய நிலையில் சிறிலங்கன் விமான சேவை

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், சிறிலங்கன் விமான சேவையின் 620 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.