மேலும்

சம்பந்தனுக்கு சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ள உறுதிமொழி

MS-Sampanthanயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதி வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கே அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் திருகோணமலை வந்திருந்த போது இந்தச் சம்பவம் தொடர்பாக பேச்சு நடத்தியதாகவும் அப்போதே, பக்கசார்பற்ற விசாரணையை நடத்துவதாக அவர் தமக்கு உறுதி மொழி வழங்கியதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

எந்தச் சூழ்நிலையிலும் சிறிலங்கா காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *