மேலும்

ரணிலின் ஐதேக தலைவர் பதவிக்கும் ஆப்பு

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஐதேக தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டார் சபாநாயகர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ்  மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு ஆளுநராக  முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க முயற்சி

வடக்கு மாகாண ஆளுநராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமத் குரேஷி இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

கோத்தா – மோடி ஒரு மணி நேரம் தனியாக பேச்சு 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தனியாக ஒரு மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார். நேற்று மதியம் ஹைதராபாத் ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தாவுக்கு  இராப்போசன விருந்து

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.

நிசாந்த சில்வாவை நாடு கடத்த மறுத்ததா சுவிஸ்?- தூதரகம் அறிக்கை

சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை, நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கோத்தாவுடனான பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்தது – மோடி

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.