சிகிரியாவில் பெயர் பொறித்த மட்டக்களப்பு பெண்ணுக்கு பொதுமன்னிப்பு – ஆணையிட்டார் மைத்திரி
சிகிரியாவில் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, புராதன சின்னத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தம்புள்ள நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

